பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை மரணம்

சென்னை கொருக்குப்பேட்டையில் பால் குடித்துவிட்டு தூங்கிய 2 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை மரணம்
x
கொருக்குப்பேட்டை குடிசை பகுதியைச் சேர்ந்த மணியின் மனைவி தேவி, 3-வது முறையாக பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தை அழுததால், பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தையை தூக்கிய போது, அது எந்த அசைவும் இல்லாததை பார்த்து தாய் பதறியுள்ளார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொருக்குப்பேட்டை போலீசார் மூச்சுத்திணறலா? அல்லது பெண் சிசு கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்