தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது - வேதாந்தா

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
x
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த அனுமதியை எதிர்த்து, பேராசிரியை பாத்திமா பாபு தொடர்ந்த வழக்கில், வருகிற ஜனவரி 21 - ம் தேதி, வரை, எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் இப்போது, தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு, விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்