ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து சென்ற பணம் திருட்டு : விசாரணையில் ஊழியர்களின் நாடகம் அம்பலம்

ராமநாதபுரம் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகக் கூறி நாடகமாடி ஒன்றரை கோடி திருடிய வழக்கில் ஊழியர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து சென்ற பணம் திருட்டு : விசாரணையில் ஊழியர்களின் நாடகம் அம்பலம்
x
மலட்டாறு அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த 1 கோடி 60 லட்சம் ரூபாய் மாயமாகிவிட்டதாக அதில் சென்ற ஊழியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தெரிவித்த போது, குருபாண்டி, அன்பு உள்பட 4 பேர் உடலில் சின்ன சிராய்ப்பு கூட இல்லாததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஊழியர்களிடம் போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பணத்தை அவர்களே திருடிவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதனை தொடர்ந்து 4 ஊழியர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 36 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்