அரசு வேலை தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

அரசு வேலை தரக்கோரி ஆட்சியர் அலுவலத்தில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
x
அரசு வேலை தரக்கோரி ஆட்சியர் அலுவலத்தில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக பணியாளர் பணிக்கு தேர்வானதாக கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை பணிக்கான  உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என கூறி ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென பெட்ரோல் எடுத்து தீக்குளிக்க முயன்றதால், செல்வத்தை அக்கம்பக்கத்தினர் தடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்