காளஹஸ்தி சிவன் கோவிலில் குங்குமார்ச்சனை விழா...
ஆந்திர மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குங்குமார்ச்சனை, கலசாபிஷேகத்துடன் வெகு விமரிசையாக நிறைவு பெற்றது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குங்குமார்ச்சனை, கலசாபிஷேகத்துடன் வெகு விமரிசையாக நிறைவு பெற்றது. கலச பிரதிஷ்டை செய்த பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கும்பம், நெய்வேத்தியம், மந்த்ரபுஷ்பம், தொடர்ந்து அகண்ட தீபாராதனை நடைபெற்றது. கார்த்திகை மாதம் நிறைவடைவதை ஒட்டி, ஆகாச தீபம் ஏற்றி, பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
Next Story