8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு : மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க புதிய அறிவிப்பாணை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு : மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க புதிய அறிவிப்பாணை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆயிரத்து 125 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தற்போது பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணை, ஏற்கனவே உள்ளதின் தொடர்ச்சியா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வருகிற 13 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்