காவிரி வழக்குகளை வாபஸ் பெற்றது திமுக தான் - அமைச்சர் காமராஜ்

தவறுகளை மறைக்கவே அரசு மீது குற்றச்சாட்டு என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
நதிநீர் பிரச்சினை பற்றி பேச, திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம், துண்டக்கட்டளை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரண பொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி பிரச்சினையில், வழக்குகளை வாபஸ் பெற்றது தி.மு.க தான் என்றும், மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் நடத்தியது வெற்று போராட்டம் என்றும், அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்