நிலத்திற்கு இழப்பீடு வழ‌ங்காத‌தால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் "ஜப்தி"...

கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.
நிலத்திற்கு இழப்பீடு வழ‌ங்காத‌தால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி...
x
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் முகமது காசிம் என்பவருக்கு செந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர்  நலத் துறைக்காக மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது. அந்த இடத்தை பயனாளிகளுக்கும் வழங்காமலும், நிலத்திற்கு உரிய இழப்பீடும் தராமலும் அழைக்கழித்து வந்த‌தாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து முகமது காசிம் தொடர்ந்த வழக்கில்,  இழப்பீட்டு தொகையை வழங்குமாறு 2016 ஆம் ஆண்டு சிவகங்கை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. இதுவரை பணம் வழங்காத நிலையில், சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்த‌னின் வாகனத்தை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த‌து. அதன்படி, ஆட்சியரின் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஜப்தி செய்யப்பட்டது. இச்சம்பவத்தால், மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்