மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வேதாரண்யம் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதியில் ஏற்கனவே 2100 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், கூடுதலாக 1000 பணியாளர்களை நியமித்து இருப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களால் தேர்வுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்