திருவள்ளூர் மாவட்டத்தில் மழை : ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை : ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஆகிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 266 கன அடி நீரும், சோழவரம் ஏரிக்கு 69 கன அடி நீரும், புழல் ஏரிக்கு 460 கன அடி நீரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 230 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்