விருத்தாசலம் : குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் : குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அருகே உள்ள தீவளுர் கிராமத்தில், மினி டேங்க் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2 வாரங்களுக்கு முன் மோட்டார் பழுதானதால், குடிநீர் விநியோகம் தடை பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்