4 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிறுமியின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
x
திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிறுமியின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் தேதி தாய் வெளியே சென்றிருந்த நிலையில், தந்தை ரங்கநாதனுடன் உறங்கி கொண்டிருந்த சிறுமியை, மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிறுமி அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் தந்தை ரங்கநாதனே பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. ரங்கநாதனும் இதை ஒப்புக் கொண்டதை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்