ஒசூர் சிறையிலிருந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஒசூரில் கொலை மற்றும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
ஒசூர் சிறையிலிருந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
ஒசூரில் கொலை மற்றும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கஜேந்திரன், பாபு, ஷாஜித்பாஷா ஆகிய 3 பேரும் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  மகேஷ்குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் உத்தரவின் பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்