ஆடுகளை கொன்று ரத்தம் குடித்த மர்ம விலங்குகள் ? : பொதுமக்கள் பீதி

தாராபுரம் அருகே ஆடுகளை கொன்று ரத்தம் குடித்து செல்லும் மர்ம விலங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆடுகளை கொன்று ரத்தம் குடித்த மர்ம விலங்குகள் ? : பொதுமக்கள் பீதி
x
தாராபுரத்தை அடுத்த சகுனிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது ஆட்டு பட்டியில், 12 ஆடுகள் கொல்லப்பட்டு கிடந்தன. இவற்றை கொன்று மர்ம விலங்குகள் ரத்த குடித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மூன்று ஆடுகள் காணாமல் போன நிலையில்,சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மர்ம விலங்குகளின் தாக்குதலால் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பீதியடைந்துள்ள பொதுமக்கள், ஆடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்