காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கொலை : போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கொலை : போலீசார் தீவிர விசாரணை
x
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் உள்ள குளத்தின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டிரப்பவர், அருகே உள்ள கடேற்றி பகுதியை சேர்ந்த 31 வயது விஜீஸ் என்பது தெரியவந்தது. கொலையான விஜீஸ், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, தான் காதலித்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை, பெண் வீட்டாரின் சம்மதமின்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்