நெல்லை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி
x
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி, சுமார் 90 பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. நல்லூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயல் பகுதிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கடையநல்லூர் அருகே உள்ள சிவராம்பேட்டையையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 30 பேர் பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்