மதுரையில் ஒரே வாரத்தில் நடந்த 5 ஆவது கொலை

மதுரையில் ஒரே வாரத்தில் நடந்த 5 ஆவது கொலை
மதுரையில் ஒரே வாரத்தில் நடந்த 5 ஆவது கொலை
x
மதுரை,பைகாரா பகுதியை சேர்ந்த கமல் என்ற கருப்பு மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர்  பரோலில் வெளிவந்துள்ளார்..  இன்று மதுரை செல்லூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது, அவரை காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காமராஜர் சாலை பாலம் அருகே வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பியோடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மதுரையில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து கோடூரமாக  நடந்துள்ள 5 கொலை சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்