பாத்திரக்கடையில் 2-வது நாளாக வருமான வரி சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்
மதுராந்தகத்தில் இயங்கி வரும் பிரபல பாத்திரக்கடையில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அப்துல் சமத் என்பவருக்கு சொந்தமான பாத்திரக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இவருக்கு புத்தூர் கிராமத்தில் பெரிய பாத்திரக்கடையும், விளாங்காடு கிராமத்தில் 10 ஏக்கரில் கோழிப்பண்ணையும், 50 ஏக்கரில் நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா ஒன்றும் உள்ளது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மதுராந்தகம் நகரில் முதல் முறையாக ஒரு வணிக நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story