நாகர்கோவில் : திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்திய திமுகவினர்

நாகர்கோவிலில் திறந்திருந்த கடைகளில் இருந்து பொருட்களை திமுகவினர் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் : திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்திய திமுகவினர்
x
முழு அடைப்பையொட்டி, நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த திமுகவினர், கடைகளை மூடுமாறு வலியுறுத்தினர். மேலும், திறந்திருந்த கடைகளில் இருந்து பொருட்களை எடுத்து சாலைகளில் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வந்த போலீசாருக்கும் சுரேஷ்ராஜன் உள்ளிட்ட திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, போலீசார், தங்களை ஆபாசமாக திட்டியதாக கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்