ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்

ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்
x
சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், கிரிக்கெட் விதிமுறைகள் உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகளை ஐ.சி.சி கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே  கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்த‌தை அடுத்து, அப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி தேர்வாகியுள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கங்குலியின் அனுபவம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என ஐ.சி.சி தலைவர் கிரேக் பார்க்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்