ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று - பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்த‌து

ஐ.பி.எல் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்து வெளியேறியது.
x
ஐ.பி.எல் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்து வெளியேறியது.

சார்ஜாவில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி, கொல்கத்தாவை எதிர் கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்த‌து. அந்த அணியில் கேப்டன் கோலி 39 ரன்களும், படிக்கல் 21 ரன்கள் எடுத்த‌னர். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி, 19 புள்ளி 4 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது. வரும் 13ஆம் தேதி சார்ஜாவில் நடைபெறும் 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்த‌க்கது.


Next Story

மேலும் செய்திகள்