தோனியுடன் பிரச்சினையா?- ரெய்னா விளக்கம்

சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.
x
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள ரெய்னா திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது சர்ச்சையான நிலையில் தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அணி உரிமையாளர் சீனிவாசன் தன்னை அவரது மகன் போல் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். போட்டியிலிருந்து இருந்து தான் விலகியது பற்றி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கூறியுள்ள ரெய்னா, குடும்ப சூழ்நிலை கருதியே ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்