பால்கனி அறை ஒதுக்காததால் ரெய்னா விலகலா? -

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதற்காக ரெய்னா வருத்தப்படுவார் என சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பால்கனி அறை ஒதுக்காததால் ரெய்னா விலகலா? -
x
ஐபிஎல் போட்டிகள் அறிவித்ததில் இருந்தே சிஎஸ்கே அணியில் இருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரெய்னா திடீரென அறிவித்தார். இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த காரணமும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் துபாயில் தனக்கு ஒதுக்கிய அறையில் பால்கனி இல்லாததால் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. கேப்டன் தோனியை போன்று தனக்கும் பால்கனி வைத்த அறை கேட்டதாகவும் இது தொடர்பாக அணி நிர்வாகத்திடமும், தோனியிடமும் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரெய்னாவின் விலகல் குறித்து அந்த அணியின் உரிமயாளர் சீனிவாசன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில நேரங்களில் "வெற்றி, தலைக்கு ஏறி விடுகிறது" என கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்காக ரெய்னா வருத்தப்படுவார் எனவும் சம்பள தொகையான 11 கோடியையும் இழப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்ப வேண்டும் எனவும் சீனிவாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  தற்போதைய சூழலை கேப்டன் தோனி முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அணியினர் உடன் காணொலி மூலம் பேசி வருகிறார் எனவும் சீனிவாசன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்