இந்தியா - நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி - நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி - நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது
x
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு டி-20 போட்டிகளிலும், இந்தியா வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாளை விளையாடும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி போட்டியானது, பகல் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்