மகளிர் டி-20 உலக கோப்பை - இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் பெண்கள் டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மகளிர் டி-20 உலக கோப்பை - இந்திய அணி அறிவிப்பு
x
இந்திய பெண்கள் அணிக்கு கேப்டனாக, ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக அதிரடி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தேர்வாகியுள்ளார்

15 பேர் கொண்ட அணியில், ஷபாலி வர்மா, ஜெமியா ரோட்ரிக்​ஸ், ஹர்லின் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பராக தனியா பாட்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணியில் பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்