இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி : மழையால் ஆட்டம் ரத்து

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற, இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி : மழையால் ஆட்டம் ரத்து
x
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற, இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20  ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனினும், மழை பெய்ததால் போட்டி துவங்கவில்லை. இதனிடையே ஆடுகளத்தை உலர வைக்க, நிபுணர்கள் ஹேர் டிரையர், அயன்பாக்ஸை பயன்படுத்தியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் ரசிகர்கள் எழுந்து நின்று வந்தே மாதரம் பாடி கரகோஷம் எழுப்பினர். பின்பு, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்