இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் இன்று 2வது டி-20 : "மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு" - கேரள அமைச்சர்

இன்று திருவனந்தபுரத்தில் இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி-20 போட்டிக்காக மைதானத்தில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் இன்று 2வது டி-20 : மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - கேரள அமைச்சர்
x
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுமார் 30 ஆயிரம் இருக்கைகள் கொண்ட கீரின் பீல்டு மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிவித்தார். ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்