தமிழக துப்பாக்கிச் சுடும் வீரர் ப்ருத்விராஜ், தோகா பயணம் : துப்பாக்கி வைத்திருந்ததால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை

கத்தாரில், நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு சென்ற தமிழக வீரர், சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தமிழக துப்பாக்கிச் சுடும் வீரர் ப்ருத்விராஜ், தோகா பயணம் : துப்பாக்கி வைத்திருந்ததால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை
x
கத்தாரில், நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு சென்ற தமிழக வீரர், சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். தமிழக வீரர் ப்ருத்வி ராஜ் தொண்டைமான், தோகா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் துப்பாக்கி எடுத்து வந்திருந்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். இதனால், போட்டிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலையம் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் ஆகியோரிடம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, தோகாவுக்கு பிருத்விராஜ் புறப்பட்டு சென்றா​​ர்.

Next Story

மேலும் செய்திகள்