விராத் கோலியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சிறுவன்...

நாட்டிங்ஹாம் மைதானத்துக்கு வெளியே ரசிகர்களை சந்தித்த விராத் கோலி சிறுவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
விராத் கோலியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சிறுவன்...
x
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, அந்த  நாட்டு அணியுடனான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது.  இந்நிலையில், போட்டி நடைபெற்ற நாட்டிங்ஹாம் மைதானத்துக்கு வெளியே கேப்டன் விராத் கோலி ரசிகர்களை சந்தித்தார். அப்போது பார்வையாளராக இருந்த சிறுவன், "விராத், ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்" என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். இதனைக் கவனித்த கோலி, அந்தச் சிறுவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதையடுத்து, அந்தச் சிறுவன் மகிழ்ச்சியடைந்தான்.

Next Story

மேலும் செய்திகள்