அதிமுக அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு

அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியதாக கட்சியின் அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியதாக கட்சியின் அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு பெறுவதற்காக சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓம்பொடி பிரசாத் சிங் ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வந்தார். முறைப்படி பணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை கேட்ட போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை ஒருமையில் பேசி தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை காவல்துறை அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகர் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்பொடி பிரசாத் சிங், இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்