"பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்" - ராகுல்காந்தி வேண்டுகோள்

வரும் 19 ஆம் தேதி தமது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
x
வரும் 19 ஆம் தேதி தமது பிறந்த நாளை ஆடம்பரமாக  கொண்டாட வேண்டாம் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலையால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் உதவி தேவைபடுவோருக்கு,  உதவ ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல கட்சி நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும், குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்அளிக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்