"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.
பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா? - பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா
x
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர். நாட்டின் பாதுகாப்பு குறித்து அவருக்கு அக்கறை இல்லை. கமிஷன்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துவார். நாடாளுமன்ற விவகாரங்களை புரிந்து செயல்படும் பல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அதுபோன்ற தலைவர்களை வளர ஒரு அரச மரபு அனுமதிக்காது என்று பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, இதுவரை ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை, ஆனால் தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் வீரம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்