பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
புதுச்சேரி மாநிலத்தில் கோரோனா வைரைஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி தமது நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள மார்க்கெட்டில் ஆய்வு செய்த அவர் பொதுமக்கள் இடைவெளி விட்டு பொருட்கள் வாங்குவதற்கும் முக கவசம் அணிவதற்கும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து வெண்ணிலா நகரில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட போது, முதலமைச்சர் அவர்கள் மருந்து தெளிப்பானை வாங்கி தெரு முழுவதும் இரண்டு பக்கமும் மருந்து அடித்தார்.
Next Story