"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை" - மத்திய அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை - மத்திய அரசு திட்டவட்டம்
x
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், அரசியலமைப்பு சட்டத்தின்படி இரட்டை குடியுரிமை வழங்க இயலாது என்றார். இதன்படி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்