"ஸ்ரீ இராமனுஜர் பிறந்த இடம் ஸ்ரீபெரும்புதூர்" - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீ இராமனுஜர் பிறந்த இடம் ஸ்ரீபெரும்புதூர் - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
x
சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில், தி.மு.க.  உறுப்பினர் டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்தார். இந்த புதிய ரயில் பாதை திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக டி. ஆர். பாலு குற்றம் சாட்டினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மிக முக்கியமான பகுதி என்றும் அங்கு ஏராளமான மதக் கோயில்கள் இருக்கின்றன என்றும், ஸ்ரீ ராமானுஜர் பிறந்த இடம் என்றும் டி. ஆர். பாலு குறிப்பிட்டார். அங்கு ஏராளமான  பாதுகாப்பு தொழிற் சாலைகள் மற்றும் ராஜீவ் காந்தி நினைவகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், கோயில்கள் பற்றிய உறுப்பினரின் பேச்சு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்