"பாதுகாப்பான கரங்களில் இந்திய பொருளாதாரம்" - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விளக்கம்
நாட்டின் பொருளாதாரம் சீராக இருந்து வருகிறது என்றும், மந்த நிலை இல்லை என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் சீராக இருந்து வருகிறது என்றும், மந்த நிலை இல்லை என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். சென்னை, தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சி சீராக உள்ளதாக கூறினார். நாட்டில் விலைவாசி உயர்வு இல்லை என்றும், பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். திட்டமிடல், செயல் படுத்துதல், மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுவதாகவும் நக்வி கூறினார்.
Next Story