அதிநவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

எல்லையில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அதிநவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
ஐ.சி.ஜி.எஸ்.வராக என்கிற அதிநவீன புதிய ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிசென்னையில் நடைபெற்றது. கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய ரோந்து கப்பலில்  பாதுகாப்பு ஆயுதங்கள், கண்காணிப்புக் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட அதி நவீன வசதிகள் உள்ளன. ஹெலிகாப்டர், அதி விரைவு படகுகளையும் கொண்டிருக்கும்.  இந்த கப்பல் மேற்கு பிராந்திய பிரிவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் என்றும், அதன் மூலம் மேற்கு கடல் எல்லைப் பகுதி கண்காணிப்புப் பணி  தீவிரமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்