ஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.
ஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...
x
தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார். ஆளுநர் குறித்து ஸ்டாலின் கடந்த காலத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு, நேர்மாறாக இந்த நடவடிக்கை இருப்பதாக கூறுகின்றனர், அரசியல் வல்லுனர்கள். 2018 ஆம் ஆண்டு ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எடுத்து வைத்தார் ஸ்டாலின். மாநில சுய ஆட்சிக்கு பாதிப்பு வருமென்றால், அதற்காக போராடி ஆயுள் தண்டனை கூட அனுபவிக்க தயார் என தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து மாநிலத்தில் ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் தானே அவருக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று எச்சரித்திருந்தார். மற்றொரு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் , ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். அவர் பதவி விலகும் வரை போராடுவோம் எனவும் அறிவித்தார். ஆனால் இன்று ஆளுநர் திடீரென அழைக்க, அவரை சந்திக்க சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த மிகப்பெரிய போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார். இந்த மாற்றங்கள் வருங்கால தமிழக அரசியலில் மாற்றங்களை கொண்டுவருமா... பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...

Next Story

மேலும் செய்திகள்