திடீரென மாயமான திமுக பிரமுகர் : திரும்பி வந்து கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்

சேலத்தில் மாயமான திமுக பிரமுகர் வீடு திரும்பிய நிலையில், தன்னை மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் கடத்திசென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திடீரென மாயமான திமுக பிரமுகர் : திரும்பி வந்து கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்
x
சேலம் அருகே சிவதாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். பனங்காடு திமுக கிளை செயலாளராக உள்ள இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது, ஏலச்சீட்டு நடத்துவது என பல தொழில்கள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை நாகராஜ் திடீரென மாயமானதால், அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச்சென்றதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் தங்கதுரை தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த‌து. இந்நிலையில், இன்று அதிகாலை, நாகராஜ், அவரது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த சூரமங்கலம் ஆய்வாளர் செந்தில், அவரது வீட்டிற்கு சென்று விசாரித்த போது, தன்னை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்திசென்றதாக நாகராஜ், திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். காரில் சித்தூருக்கு கடத்தி சென்ற அந்த மர்ம கும்பல், அங்கு பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் இல்லை என்பது தெரிந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டி அனுப்பி வைத்த‌தாகவும் நாகராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த‌தாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் மீது புகார் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நாகராஜ், உண்மையாகவே கடத்தப்பட்டாரா, அல்லது அவரே கடத்தல் நாடகம் ஆடுகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்