"மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாடு பாதுகாப்பாக இருக்க , மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோயில், குமராட்சி பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் வாக்கு சேகரித்து பேசிய அவர், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்றார். 
நல்ல பிரதமர் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்றும் கூறிய அவர், ஸ்டாலின் சொல்கிறபோதெல்லாம் நான் ராஜினாமா செய்வதாக இருந்தால் இதுவரை 100 முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்