கருணாநிதியின் முதல் உருவச்சிலை, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படுகிறது

50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியின் முதல் உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் முதல் உருவச்சிலை, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படுகிறது
x
* முதல் சிலை அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பிறகு மாநிலத்தின் பிற பகுதிகளிலும், ஆந்திர மாநிலம் நகரியிலும்  மற்ற சிலைகள் திறக்கப் படும்  என்று தகவல் வெளியாகி உள்ளது.  கருணாநிதியின் உருவச்சிலையை செய்யும் பணிகள் மீஞ்சூரில் நடைபெற்று வருகிறது. 

* அந்த பணி  முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில் அண்ணாவின் சிலை அருகிலேயே கருணாநிதியினுடைய முழு உருவச் சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தினை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். சிலை திறப்பு விழா  நவம்பர் 14ஆம் தேதி அல்லது டிசம்பர் மாதத்தில் இருக்கும் என்று தெரிகிறது. விழாவில் பங்கேற்குமாறு  தேசிய மற்றும் பல்வேறு மாநில தலைவர்களை அழைக்கவும் திமுக  திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


Next Story

மேலும் செய்திகள்