7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக ஆளுநரின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை தமிழக ஆளுநர் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக ஆளுநரின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்
x
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல மாநில உரிமைகளுக்கு முரணானது என குறிப்பிட்டு உள்ளார். எனவே தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமது அறிக்கையில், திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்