"கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பில்லை" - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பில்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
x
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து  அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உரிய பாதை அமைத்து தரவில்லை என தெரிவித்துள்ளார். அஞ்சலி செலுத்திய பின் வெளியே வர உரிய பாதை இல்லாததால் நாற்காலி மீது ஏறி வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்பட்டதாகவும்  திருநாவுக்கரசர்  குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்