கான்பூரில் கொள்ளை முயற்சி.. அமெரிக்காவில் இருந்தபடி தடுத்த பொறியாளர்

தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்தபடியே தனது வீட்டில் நடைபெறவிருந்த கொள்ளை சம்பவத்தை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பொறியாளர் முறியடித்து உள்ளார்.
x
கான்பூரில் கொள்ளை முயற்சி.. அமெரிக்காவில் இருந்தபடி தடுத்த பொறியாளர் 

தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்தபடியே தனது வீட்டில் நடைபெறவிருந்த கொள்ளை சம்பவத்தை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பொறியாளர் முறியடித்து உள்ளார்.கான்பூரை சேர்ந்தவர் விஜய் அவஸ்தி. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஐ.டி. பொறியாளராக இவர் பணிபுரிந்துவரும் நிலையில், கான்பூரில் உள்ள அவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக நுழைந்து உள்ளனர். இதனை தனது செல்போனில் உள்ள செயலி மூலம் அறிந்த அவர், அமெரிக்காவில் இருந்தபடியே சிசிடிவி காட்சிகளை நேரலையாக பார்த்து உள்ளார். தொடர்ந்து, சிசிடிவி கேமராவை கொள்ளையர்கள் உடைத்த நிலையில், உடனடியாக தனது நண்பர் மூலம் கான்பூர் போலீசாருக்கு அந்த பொறியாளர் தகவல் அளித்து உள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் சென்ற நிலையில், கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு கொள்ளையனை பிடித்தனர். மற்ற கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களைத் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்