மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இட ஒதுக்கீடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இட ஒதுக்கீடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சிஎம்சி மருத்துவக்கல்லூரி அசோசியேஷன் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.



Next Story

மேலும் செய்திகள்