எச்சில் உமிழ்ந்து முடி வெட்டியதால் சர்ச்சை! - முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

இந்தியாவின் பிரபல முடி திருத்தும் கலைஞர் ஜாவீத் ஹபிப்பியின் செயலால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
x
இந்தியாவின் பிரபல முடி திருத்தும் கலைஞர் ஜாவீத் ஹபிப்பியின் செயலால் சர்ச்சை கிளம்பியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் முடி திருத்தம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்திய ஜாவீத், ஒரு பெண்ணிற்கு எச்சில் உமிழ்ந்து முடி வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இது குறித்து காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜனவரி 11 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி தனது செயலுக்கு விளக்கமளிக்குமாறும் ஜாவீத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்