பானி பூரி பாக்கெட்டில் மறைத்து , 3 கிலோ போதை மாத்திரை கடத்திய 2 பேர் கைது

கேரளாவுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ போதை மாத்திரையை பறிமுதல் செய்த போலீசார்,
x
கேரளாவுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ போதை மாத்திரையை பறிமுதல் செய்த போலீசார்,  இருவரை கைது செய்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக, கேரள போதை தடுப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, டெல்லியில் இருந்து ஆலுவா ரயில் நிலையம் வந்த மங்களா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்திய போலீசார், 3 கிலோ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பானிபூரி மற்றும் பழச்சாறு பாக்கெட்டில் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. எர்ணாகுளம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த  ராகுல், சைலு லபுதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்