300 பெண்களுக்கு திருமணம்... தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
x
குஜராத்தில், ஆதரவற்ற இளம் பெண்கள் 135 பேருக்கு, மகேஷ் ஸவனி என்ற தொழிலதிபர் நடத்தி வைத்த திருமண விழா களைகட்டியது. ஆண்டுதோறும் ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் அவர், இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாட்டை தொடங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில், 135 பெண்களை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற திருமணங்களை குடும்பத்துடன் இணைந்து செய்துவரும் மகேஷ் ஸவனியின் மூலம், நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கல்யாண உடை, அலங்காரம், சீர்வரிசை என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்துவைப்பது பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்