"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்"

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
x
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. 

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது. 

இதேபோல், நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  

ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில், 70 கிலோமீட்டர் வரை புயல் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
டிச.5 - இடியுடன் கன மழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர்


Next Story

மேலும் செய்திகள்