சல்மான் குர்ஷித் புத்தகத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் எழுதிய "சன்ரைசஸ் ஓவர் அயோத்யா" புத்தகத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சல்மான் குர்ஷித் புத்தகத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
x
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் எழுதிய "சன்ரைசஸ் ஓவர் அயோத்யா" புத்தகத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், சல்மான் குர்ஷித் தனது புத்தகத்தில் இந்துவத்தை பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டுள்ளதாகவும், புத்தகம் வெளியானால் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் முறையிடப்பட்டது. இதனால், புத்தகத்தை வெளியிடவும், அச்சிடவும் தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புத்தகத்தை படித்து எளிதில் புண்படக் கூடியவர்களாக மக்கள் இருந்தால் அதற்கு நீதிமன்றம் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதுடன், மனுவை தள்ளுபடி செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்